sdfgsஇலங்கையில் மாலபே தனியார் வைத்திய கல்லூரி நிறுவுதல் மற்றும் எட்கா எனும் இலங்கை இந்திய பொருளாதார ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா வைத்தியர்கள் விடுதியிலிருந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஹொறவப்பொத்தானை வீதியூடாக மணிக்கூட்டுக் கோபுரம் வீதி வழியாக கார்கில்ஸ் புட்சிட்டியை வந்தடைந்து அங்கு வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணிநேரமாக நீடித்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், “வைத்திய சேவையின் இதயத்தை காப்போம்”, “போலிப் பட்டம் விற்கும் சைட்டத்தினை மூடு”’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தியர்கள் முன்வைத்தனர்.