athuraliye rathnaவட மாகாணத்துக்கு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் மூலம், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். வட மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் போது, படையினரின் அதிகாரம், மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தேசிய பேரவை நிகழ்வின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.