websitesஎதிர்வரும் 7ஆம் திகதி முதல் காவற்துறை நற்சான்றிதழ் அறிக்கையினை காவற்துறை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறைமைக்கு அமைய இணையத்தளத்துடன் இணைந்துள்ள நிலையில் துரிதகதியில் அறிக்கையினை பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் பரிவர்தனை தொழில்நுட்ப முகவர் மற்றும் காவற்துறை தகவல் தொழில்நுட்ப பிரிவு என்பன இணைந்து இந்த இணைய தளத்தினை ஸ்தாபித்துள்ளது. பொது மக்கள் றறற.pழடiஉந.டம என்ற இணைய தளத்தின் ஊடாக தமது கணனி அல்லது கையடக்க தொலைபேசியின் ஊடாக காவல்துறை அறிக்கை விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பெற முடியும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த புதிய இணையத்தளம், நாளை மறுதினம் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.