chritena lagardசர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகாட் இந்த மாதத்தில் இலங்கை வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களினால் திட்டமிட்டது போல் அவர் இலங்கை வர முடியாது உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விரைவில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என அவரினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட கடன் சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில், நட்டத்தில் செயல்படும் அரச நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை சிறந்த முறையில் லாபம் ஈட்டக்கூடியதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு கடுமையான சட்டங்களுக்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கடந்த வருடம் நடுப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பாக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் கொழும்பு வந்துள்ள குழு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.