aதிருகோணமலை, பாலம்பட்டாறு பகுதியில் நேற்றுமாலை 6.30அளவில் உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்தின் இரும்புபாகம் டிமோபட்டா லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய், ரஜஎல பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்னர் மரணமடைந்த நபரொருவரின் 01வருட பூர்த்தியை முன்னிட்டு, 05ம் கட்டை பகுதியிலுள்ள அநாதை சிறுவர் இல்லத்துக்கு, தானமாக இரவு சாப்பாடு வழங்குவதற்காகவே அந்த டிமோ பட்டா லொறியில் இவர்கள் பயணித்துள்ளனர். அந்த லொறியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18பேர் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்களில், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.