Geneva UNஐ.நா மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று நாளைய தினம் நடாத்தப்பட உள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ஆம் அமர்வுகளில், இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பிலேயே நாளை கலந்துரையாடப்பட உள்ளது.

இந்நிலையில், தீர்மானம் தொடர்பிலான உத்தேச வரைவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நாளைய தினம் பேசப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு மற்றும் கலப்பு நீதிமன்றம் ஆகிய விடயங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் திருத்தங்களை செய்ய இலங்கை அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முனைப்புக்கள் வெற்றியடையக்கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக அறியமுடிகின்றது.