r44வவுனியாவில் தொடர் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இவர்களின் போராட்டத்திற்கு இன்று காலை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்களும் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

அத்துடன் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் அவசரகால சட்டடத்தினை நீக்குமாறும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி இம்மக்கள் தமது போராட்டத்தினை இன்று 12 ஆவது நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.