accordஇலங்கை மற்றும் இந்தோனேஷியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.