sdfதிருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்றுமாலை கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 12 டொல்பின் மீன்கள் சிக்கி இறந்துள்ளன.

அதையடுத்து திருகோணமலை விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கரைவலையை இழுத்த மீனவர்கள் 9பேரை கைதுசெய்ததுடன் 12 டொல்பின்களையும் கைப்பற்றி திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். 9 மீனவர்களையும் 12 டொல்பின்களையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கைகளில் துறைமுக பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.