accident (3)திருகோணமலை கந்தளாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை நோக்கிப் பயணித்த கெப் வண்டியொன்று காரொன்றுடன் மோதி இன்று அதிகாலை 3.45 அளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தின்போது கெப் வண்டியில் பயணித்த 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.