கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி கடந்த 4ஆம் திகதி முன்னெடுத்திருந்த கவனஈர்ப்பு போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகியன இதுவரை அரசிடமிருந்து கிடைக்காததினாலே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முடிவு வரும்வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.