vaவவுனியாவில் கடந்த 16 தினங்களாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களால் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் காலை 11.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதிவழியாக, மணிக்கூட்டக்கோபுர ஊடாக பசார் வீதி. இலுப்பையடி சென்று, அங்கிருந்து, நீதிமன்ற வீதியூடாக காணாமற்போன உறவினர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். இதில் கலந்துகொண்டவர்கள் ”பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், காணாமல் அக்கப்பட்டோருக்கு பதில் கூறு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேட உனக்கு எத்தனை ஆணைக்கு ஆண்டுகள் தேவை? ” போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.