கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 21வது நாளாகவும் தொடர்ந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்றுடன் 21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.