dgfகிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் லான்ட்மாஸ்ரர் விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் கடவையை லான்ட்மாஸ்ரர் கடப்பதற்கு முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் ஒரு வாரத்துக்குள் நடைபெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும். விபத்து இடம்பெற்றபோது சமிக்ஞை விளக்கு சரியான முறையில் ஒளிரவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.