sfsவவுனியாவில் கடந்த சில தினங்களில் 22பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களையும், குழந்தைகளையும் தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிட அழைத்துவருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும், தற்போது 22 பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு 16 பேர் சிகிச்சையின் பின் வீடு சென்றுள்ளதாகவும் 5பேர் விடுதியில் தங்கி சிகிச்சைபெற்று வருவதாகவும், ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார். அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.