dfgகிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரு வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தபடும்போது, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டனர் என தெரிவிக்கப்பட்டு ஐவர் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கு, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு, எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேவேளை, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக்குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐந்து பொலிஸார் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரு வழக்குகளிலும் சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதற்காக கைதிகளை அழைத்துவந்தபோது, வழமைக்கு மாறாக பலத்த பாதுகாப்புகளுடன் அழைத்துவரப்பட்டிருந்தனர்.