sவவுனியாவில் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஷெல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஷெல் உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து காணியின் உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளர் தனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்ட நிலையில் 60 மில்லி மீற்றர் ஷெல்லினை கண்டுள்ளார்.