தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இலங்கை வரும் அவர் மூன்று தினங்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பாரெனவும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது அவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.