NPC (4)வடக்கு மாகாண சபையில் இன்று நடைபெற்றிருந்த சிறப்பு அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் சபையை அவமதிக்கும் வகையில் செயற்ப்பட்டதாகவும், இதனால் வடக்கு மாகாண சபை அமர்வின் ஆரம்பத்திலேயே குழப்பநிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தால், ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதத்தின்போதே இந்த குழப்பநிலை உருவாகியுள்ளது. இதன்போது, ஆரம்பத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்மானமும் தற்பொழுது அவையில் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான அறிக்கையும் மாற்றமாக உள்ளது. எனவே இதனை நாங்கள் படித்து கால அவகாசத்தின் பின்னரே தான் இது தொடர்பில் ஆராய வேண்டும் என சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலையே வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், ஐ.நா தீர்மானத்தை நடை முறைப்படுத்துமாறு கொண்டுவந்த தீர்மானத்தை கிழித்து எறிவதாக தெரிவித்து அத் தீர்மானம் குறிப்பிடப்பட்டிருந்த தாழினை சபையில் கிழித்தெறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.