usa sriஇலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்த தம்மால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.இதுவே, இம்முறை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்ட யோசனையின் நோக்கம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் மீளவும் குறித்த யோசனைக்கு இணைப் பங்காளராக சேர்ந்து கொண்டமை தொடர்பிலும் அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.