ganjaயாழில் இருந்து கொழும்பிற்கு சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் இரண்டு கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கமைய கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கிளிநொச்சி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் குறித்த பேருந்து வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரண்டு சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.