SATELLITEஜப்பான், வடகொரியாவை உளவு பார்க்கும் புதிய செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

வடகொரியா  அவ்வப்போது ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாலும். தென்கொரியா, அமெரிக்கா கூட்டு இராணுவப் பயிற்சிகளாலும் பசுபிக் பிராந்தியத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.இந்நிலையில் வடகொரியாவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த புதிய செயற்கைக்கோளானது ஜப்பானின் கடற்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வடகொரியாவை, விண்ணில் இருந்தபடி உளவு பார்ப்பதோடு, அந்நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பானின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

மேலும் ஜப்பானை குறிவைத்து பசுபிக் கடற்பிராந்திய பகுதிகளில், கடந்த 1998 ஆம் ஆண்டு வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையினை பரிசோதித்ததை தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு முதல் உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை ஜப்பான் விண்ணில் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையிலும் ஜயப்பானை குறிவைத்து பரீட்சித்தப்பார்த்த ஏவுகணைகள் அந்நாட்டை அண்மித்த கடற்பரப்பில் விழுந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.