missingதிருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு இன்று மாலை முதல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மாலை அங்கிருந்து அகன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைரின் இல்லத்தின் முன்னே திரண்டனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்றும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், 15 நாட்களாக கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனை முன்பும், தற்போது எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சம்பந்தன் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரின் வருகையை எதிர்பார்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும், எதிர்க்கட்சித் தலைரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.