demo01கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே கொழும்பில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட அனைவரையும் அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், அரசியல் கைதிகள் அனைவரையும் உடன் விடுதலை செய்யவேண்டும்,வடக்கு கிழக் கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள ஒப்படைக்கவேண்டும் மற்றும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் உட்பட சகல அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச்செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்த சம உரிமை இயக்கம் இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றது.