வீதியிலும் ஒருநாள் செயற்திட்டத்தின் கீழ் பா.உ எஸ்.வியாழேந்திரன்(அமல்) அவர்கள் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவில் உள்ள எண்ணம்பாலப்பூவல் கிராம மக்களை நேற்று (20.03.2017) நேரில் சென்று சந்தித்துள்ளார்.
எண்ணம்பாலப்பூவல் இளைஞர்களின் வேண்டுகோளிற்கமைய எண்ணம்பாலப்பூவல் கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் வீடு வீடாகச் சென்று மக்களது நிறைகுறைகளை கேட்டறிந்ததோடு, கிராமத்தில் உள்ள குளங்கள், பாதிப்படைந்து காணப்படும் வீதிகள், யுத்ததினால் பாதிப்படைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள், புனரமைக்கப்படாது காணப்படும் விளையாட்டு மைதானம் போன்றவற்றை பார்வையிட்டதுடன் கிராமத்தின் விவசாய அமைப்பு, விளையாட்டுக்கழகம், ஆலய நிருவாகத்தினர், இளைஞர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
Read more