geeth noyarஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் மற்றுமொரு இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது ஊடகவியலாளர் கீத் நொயாரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இராணுவ புலனாய்வு உறுப்பினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இராணுவ புலனாய்வு உறுப்பினரை நேற்றிரவு 9.30 அளவில் கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 34 வயதான இராணுவ புலனாய்வு உறுப்பினர், மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் மே மாதம் 22 ஆம் திகதி, கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய அவரை இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 30ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.