maithriரஸ்ய அரச தலைவர் விளாடிமிர் புட்டினின் அழைப்பினை மூன்று நாள் விஜயத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இன்று அதிகாலை 5.45 மணிக்கு ஈ.கே 641 என்ற விமானத்தின் மூலம் ரஸ்யா நோக்கி அரச தலைவர் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரச தலைவர் ஒருவர் நான்கு தசாப்தங்களின் பின்னரே ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.