jjjjjஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்து மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலத்தின் முன்னால் 8ஆவது நாளாகவும், இன்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியும் அரசாங்கத்தக்கு கால அவகாசம் வழங்குவது தமக்கான தீர்வினை கிடைக்கச் செய்வதில் பெரும் சிக்கல் நிலை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்துகின்றனர். அத்துடன், தமக்கு வயது செல்லச் செல்ல பிள்ளைகளைத் தேடும் வலு தமக்குக் குறைவடைந்து செல்வதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். ஏழு நாட்கள் கடந்துள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களை, எந்தவொரு தமிழ்த் தலைமைகளும் சென்று சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.