ssfகிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை எனக் கோரி ஆரம்பித்த போராட்டம் இன்று 3 ஆவது நாளாக தொடருகிறது.

இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராடும் மக்கள் கூறியுள்ளனர்.