police-stationபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜயசிங்க, களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.ஆர்.பீ.சேனாநாயக்க, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி.ஹெட்டியாராச்சி, நுகேகொடையிலிருந்து முல்லேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.எஸ்.கருணாரத்ன, சீதவாக்கபுரவிலிருந்து கொட்டவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.