wickramasingheமலேஷியாவில் நடைபெறவுள்ள ரோயல் பொலிஸ் தினத்தில் கலந்துகொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சென்றுள்ளதால், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 210ஆவது ரோயல் பொலிஸ் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பொலிஸ்மா அதிபர், இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். நான்கு வாரங்கள் பதில் பதில் பொலிஸ்மா அதிபராக சீ.டீ.விக்ரமசிங்க கடமையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.