mannarமன்னார் பாப்பமோட்டைப் பகுதியிலிருந்து மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மோட்டார் குண்டுகள், மிதி வெடிகள் மற்றும் புலிகளால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை நீதிமன்ற உத்தரவின் பெயரில், செயழிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.