lanka malaysiaபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் மலேஷிய பாதுகாப்பு அமைச்சர் டாடோ சேரி நிஷாமுதின் ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தத் தேவையான விடயங்கள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், தெற்காசிய வலய நாடுகள் என்ற அடிப்படையில் மலேஷியா மற்றும் இலங்கைக்கு இடையில் முன்னெடுக்கப்படும் நீண்டகால நட்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த முக்கியம் என, இந்த சந்திப்பின்போது அமைச்சர் ருவன் விஜேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.