indian shipபயிற்சி நடவடிக்கையொன்றுக்கான விஜயத்தை மேற்கொண்டு, இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் தர்ஷக், கொழும்புத் துறைமுகத்தை, நேற்று வந்தடைந்துள்ளது.

மேற்கு கடற்படைப் பகுதியின் கொமாண்டர் ரியர் அட்மிரல் நிராஜ அட்டிகல, அந்தக் கப்பலின் கப்டனான பியூஸ் பவ்சேவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைக் கடற்படையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில், இந்திய கப்பற் குழுவினர் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கப்பல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.