jjjதிருகோணமலையிலுள்ள கிண்ணியா தள வைத்தியசாலையை தரம் உயர்த்தித் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கிண்ணியா இளைஞர்கள்,சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். தமது கோரிக்கைகான தீர்வு பெற்று தரும்வரை தங்களின் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.