dddகிளிநொச்சி – பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர். நாம் 1990ஆம் ஆண்டு முதல் மேற்படி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம். இதுவரை எமக்கு யாரும் உதவவில்லை. எங்களின் விடயத்தில் எல்லோரும் அக்கறையின்றியே இருந்து விட்டனர். எனவே தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திலாவது அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.