Captureஇலங்கைப் பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின்மீது, சட்டவிரோத ஊடுறுவல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இணையத்துக்குள் ஊடுறுவியவர்கள், பொலிஸாரின் இணையப் பக்கத்திலிருந்த எந்தவொரு தகவலையோ, பதிவுகளையோ அல்லது தரவுகளையோ அழிக்கவில்லை என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த இணையத்தை ஊடுறுவியவர்கள், இணையத்தின் முகப்பு பகுதியில் மாத்திரமே மாற்றத்தை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.