hfgfகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்விஅமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் என தெரிவித்து, கிளிநொச்சி, கந்தசாமி கோவில் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 37ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அதேவேளை, மருதங்கேணியில் 13 ஆவது நாளாக எவ்வித தீர்வுகளும் இன்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.