mangalaஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து கருத்துக் கூறிய அமைச்சர், கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி சர்வாதிகார ஆட்சி தோற்கடிக்கப்பட்டதுடன், அதனைக் கண்ட உலகமே புதுமைப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.