sssயாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள், விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதி போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

கலைப்பீட முதலாம் வருட மாணவர்களுக்கு, நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின்போது வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு, வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அனைத்து வருட கலைப்பீட மாணவர்களும் வாய்களை துணியால் கட்டி அமைதி வழியாக இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்ததோடு இந்த போராட்டத்தில் நிர்வாகத்துக்கு எதிராக, “உங்களைப் போன்றவர்களால் தான் தமிழர்களுக்கு விடிவில்லை”, “பாலியல் சேட்டை புரிந்தவருக்கு சம்பளத்துடன் விடுவிப்பு” போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.