q2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளியின் பிள்ளைக்கு மடிக்கணணி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று லண்டன் நாட்டை சேர்ந்த MS.DHUSIRA WIGNARAJAH என்பவர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தன் ஊடாக களனி பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவி அ.டக்சியானி என்பவருக்கு அவரது கல்வி நடவடிக்கை ஊக்குவிக்கும் முகமாக 53000 ரூபா பெறுமதியான புதிய மடிக்கணனி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மேற்படி விண்ணப்பம் பெருங்குளம் சந்தி சாவகச்சேரியை முகவரியாக கொண்ட அகத்தியர் ஆனந்தராஜா என்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்டுள்ள பயனாளி தனது பிள்ளை களனி பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் கற்கை நெறியை கல்வி பயின்று வருகின்றார் என்றும் தான் கடந்தகால யுத்த்தின் போது முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இடுப்புக்கீழ் இயங்க முடியாத அவல நிலையில் உள்ளதாகவும் தங்களது குடும்ப வாழ்வாதாரம் தனது மனைவியினால் நடாத்தபடும் சிறுகடை ழூலம் கிடைக்கும் வருமானம் முலம்மே கிடைப்பதாகவும் எனவே தனது மகளின் கற்கை நெறியை தொடர்வதற்கு கணனி தேவையாகவுள்ளதாவும்

தமது வருமானம் உணவுக்கு மட்டுமே போதுமாகவுள்ளதால் தனது மகளுக்கு மடிக்கணனி ஒன்றை பெற்றுத் தந்து மகளின் கல்விக்கு உதவுமாறும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து மாணவியிடம் மடிக்கணனி அன்பளிப்பு செய்யபட்டுள்ளது.

இன்று ஒரு மாணவியின் கல்விக்கு ஒளியேற்றி வைத்துள்ள MS.DHUSIRA WIGNARAJAH அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயணாளிகளின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இவர்களது சேவை கல்விக்கு தடையாக உள்ள எங்களின் உறவுகளுக்கு தொடர வேண்டியும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)