sadfsdsவேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருமாறு கோரி வட மாகாணத்தில் கடந்த 32 நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.