fffயாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தென்னிலங்கை அரசாங்கத்தின் நற்பெயரை பாதுகாத்து கொள்வதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் பல்வேறு வழிகளில் மாணவர்களின் உரிமைகளை அடக்கி வருவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இதன்போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.