ssவட மாகாண புதிய கடற்படை கட்டளை தளபதி ரியல் எட்மிரல் கே.கே.ஜே.டி சில்வா வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பானது, நட்பு ரீதியான சந்திப்பாக அமைந்திருந்தது என வட மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படுகின்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் குறித்து இதன்போது மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சட்ட ரீதியாக முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து வட மாகாண புதிய கடற்படை கட்டளை தளபதிக்கு, வட மாகாண ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.