fishingஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு கடற்றொழில் அமைச்சுக்களினது அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை இந்திய கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். தற்போது இந்திய மீனவர்கள் 38 பேர் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் எவரும் இந்தியாவில் கைது செய்யப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.