electric-trainபாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் நிமல் சந்திரசிறி கூறியிருந்தார்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தில் இருந்து இதுவரை சாதமகமான பதில் எதுவும் கிடைக்காததன் காரணமாக அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் சரியான தீர்வொன்றை வழங்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் நிமல் சந்திரசிறி கூறியுள்ளார்.