வட மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகள் வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வட மாகாணத்தில் மாத்திரம் சுமார் 3500 பட்டதாரிகள் வேலையில்லா பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், வெளி மாகாணங்களிலுள்ள பட்டதாரிகள் வட மாகாணத்திற்குள் உள்வாங்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், வட மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more