Geneva UNஇலங்­கை­யில் மைத்­திரி-– ரணில் ஆட்­சி­யி­லும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் சாட்­சி­யங்­க­ளு­டன் கூடிய ஆவ­ண­மொன்று ஐ.நா மனித உரிமைகள் சபை­யின் மீளாய்­வுக்கு பன்­னாட்டு மனித உரி­மை­கள் அமைப்­பால் முன்­வைக்­கப்­பட்டுள்­ளதாக தெரியவருகின்றது.

தென்­னா­பி­ரிக்கா ஜொஹா­ன்ஸ்­பேர்க்­கைத் தள­மா­கக் கொண்­டி­யங்­கும் இலங்­கை­யின் உண்­மைக்­கும் நீதிக்­கு­மான திட்­டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்டு வரை மைத்­திரி ரணில் ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற 48 கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வதைச் சம்­ப­வங்­களை உள்­ள­டக்­கிய இந்த ஆவ­ணத்தை ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் மீள்­பார் வைக்கு முன்­வைத்­துள்­ளது. ஐ.நாவின் உறுப்பு நாடு­க­ளில் நில­வும் மனித உரிமை நிலை­மை­கள் காலத்­துக்­குக் காலம் காத்­தி­ர­மான மீளாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இந்த மீளாய்­வுச் செயற்­பாட்­டின் 28 ஆவது கூட்­டம் இலங்கை தொடர்­பில் எதிர்­வ­ரும் நவம்­பர் 15ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.