vavuniya new bus standபெரும் நிதிச் செல­வில் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாழடையுமுன் மாற்று ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு அதை மக்­கள் பயன்­பாட்­டுக்கு விட வேண்­டும் என்று மாவட்ட மக்­கள் கோரிக்கை விடுத்­துள்ள­னர்.

திட்­ட­மி­ட­லின்மை கார­ண­மா­க­வும், ஒத்­து­ழைப்பு இன்­மை­யா­லும் 195 மில்­லி­யன் நிதிச் செல­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் கால்­ந­டை­க­ளி­ன­தும் நாய்­க­ளி­ன­தும் கூடா­ர­மா­க­வும் விளங்­கு­கின்­றது. மாவட்­டத்­தின் அபி­வி­ருத்­திக்கு உகந்த வகை­யில் பயன்­ப­டுத்த உரிய திட்­ட­மி­டலை மேற்­கொண்டு ஆவன செய்ய வேண்­டும். மக்­க­ளின் வரிப் பணத்­தில் அமைக்­கப்­பட்ட இந்­தத் திட்­டம் வீணா­காத வகை­யில் பொருத்­த­மான முடிவை மேற்­கொள்ள வேண்­டும். பேருந்து நிலை­ய­மா­கவோ அல்­லது பொருத்­த­மான செயல்­பாட்­டையோ மேற்­கொண்டு கட்­ட­டம் பாதிப்­ப­டை­யா­த­வாறு பாது­காக்க முன்­வர வேண்­டும்.”- என அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்ள­னர்.