எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த செல்வன் அகிலியன் மோகன் அவர்கள் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முல்லைத்தீவு மாவட்த்தை சேர்ந்த விழிப்புலன் செவிப்புலனற்ற 54 மாணவர்கள் தங்கி கல்வி கற்றுவரும் இனிய வாழ்வு இல்லத்திற்கு
சிறார்களின் உணவு தேவையை கருத்தில் கொண்டு பருப்பு 20கிலோ சீனி 50கிலோ அரிசி 115கிலோ என்பவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தனது பிறந்ததினத்தை முன்னிட்டு பிள்ளைகளின் உணவு பொருட்களின் தேவையை கருத்தில் கொண்டு உணவு இருப்பை உறுதிசெய்துள்ள செல்வன் அகிலியன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்களின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)